Thursday, May 3, 2012

சனாகானும் பத்திரிகை தர்மமும்

எப்பொருள் குறள் யாருக்கு பொருந்துமோ இல்லையோ பத்திரிகைகளுக்கு நன்கு பொருந்தும். இன்றும் நம் மக்களை பொறுத்த வரை பத்திரிகையால் ஒருவன் குற்றம் சாட்டப்பட்டால் அவன் குற்றவாளி. அச்சில் ஏற்றப்பட்ட குற்றம் எந்த நீதிமன்றத்திலும் நிருப்பிக்கபடாவிட்டாலும் குற்றமே.

இன்று தினமலர் வலைத்தளம் சென்றவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக பார்க்கலாம்.


ஆனால் இதை படித்த எத்தனை பேர் இந்த புகைப்படத்தை பார்த்திருக்க போகிறீர்கள்.


இதென்னடா படம் என்கறீர்களா....

இதில் இருப்பவர்கள்தன அந்த செய்தியில் வந்த கைதான பெண்கள்... இதில் வட்டமிட்டு காட்டப்பற்றிருபவர்தான் சனா கான். அவர் ஒரு junior artist பாலிவுடில்.

இப்பொழுது இதை ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்....

இன்று எத்தனை பேர் அந்த செய்தியை வாசித்திருப்பார்கள். அவர்கள் அனைவரின் எண்ணத்திலும் இனி சனாகான் ஒரு விபச்சாரி. எந்த தவறும் செய்யாமல் அவரை ஒரு கூண்டில் ஏற்றப்பட்டு தண்டனையும் வழங்கிவிட்டார் அந்த பத்திரிகைக்காரர். நிஜமாக குற்றம் புரிந்த அவருக்கு என்ன தண்டனை.

இதே செய்தியை நடிகையல்லாத மற்றொரு பெண் பற்றி வந்திருந்தால் எத்தனை பேர் உடனே நம்புவோம். அவ்வளவு ஏன்... இதே போன்று ஒரு நடிகரை கைது செய்ததாக செய்தி வந்தால் உடனே நம்புவோமா... ஏன் இந்த முரண்... ஒரு நடிகை என்பதாலா இல்லை ஒரு பெண் என்பதாலா..

நடிகை என்ற ஒரே காரணத்துக்காக அவர் பற்றிய ஒரு ஆதாரமில்லாத செய்தியை உடனே வெளியிட்ட அந்த பத்திரிக்கை நண்பரை போல் எத்தனை பேர் நம்மில் குற்றங்களை நம்பி ஆதாரங்களை புறந்த்தள்ளுகிறோம்.

இறுதியாக ஒரு சினிமா செய்தியைக்கூட விசாரித்து வெளியிட முடியாத நிருபரும் அதன் உண்மை தன்மையை உறுதி செய்யாமல் வெளியிடும் ஆசிரியரும் கொண்ட இந்த பத்திரிகையின் வேறு எந்த செய்தியை நாம் நம்புவது...

சிந்தனை செய்யுங்கள்.....

No comments:

Post a Comment

உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...